சென்னை | 31.01.2026
பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகப் பிரச்சினைகள், மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை வெளிச்சம் போடுவது பத்திரிகையாளர்களின் கடமை. அந்தக் கடமையை ஆற்றும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் தாக்குதல்கள், கருத்துச் சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும் நேரடியாக பாதிக்கும் செயலாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம், செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை எழுப்புவதாக தமிழ்நாடு டுடே இதழ் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டே இதழ் கோரிக்கை வைத்துள்ளது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.
