Sun. Mar 22nd, 2026



விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!
நகராட்சி நிர்வாகமே!
பள்ளிக்கல்வித்துறையே!

விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்
விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,
ஒரே வகுப்பறையில் இரண்டு முதல் மூன்று வகுப்புகள் பிரித்து நடத்தப்படும் நிலை உள்ளது. மேலும், பல மாணவர்கள் வரண்டா மற்றும் படிக்கட்டுகளில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய அவல நிலை தொடர்ந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில்,
மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாத அதே பள்ளி வளாகத்திற்குள்ளேயே, நகராட்சி நிர்வாகம் கடைகள் நடத்தி வருவது பெரும் கேள்விக்குறியை எழுப்புகிறது.

மாணவர்களின் கல்வி முக்கியமா?
அல்லது நகராட்சிக்கு கிடைக்கும் வருமானம் முக்கியமா?

திராவிட மாடல் அரசே!
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,
பள்ளி வளாகத்தில் இயங்கும் கடைகளை உடனடியாக அகற்றி,
அந்த இடத்தில் கூடுதல் பள்ளி கட்டடங்களை அமைத்து,
மாணவர்களுக்கு போதிய வகுப்பறை வசதி ஏற்படுத்த
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையிடம்
பொதுமக்கள் சார்பில் வலியுறுத்திக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS