Mon. Apr 13th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

இந்திராகாந்தி 109வது பிறந்தநாள் விழா!

இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாள், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விழா! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், போ. மல்லாபுரம் பகுதியில் இன்று (19.11.2025) முன்னாள் பிரதமர், நாட்டின் இரும்பு பெண்மணி என போற்றப்படும் இந்திரா காந்தி அம்மையார்…

தருமபுரி சமூக பணி அமைப்புக்களுக்கு பாராட்டுக்கள் 💐

தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு – சமூக அமைப்புகளின் மனிதாபிமானச் சேவைகளை பாராட்டி மகிழ்வித்தனர். தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தனியாக சுற்றித் திரிந்து வந்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின்…

சாலை மறியல் போராட்டம்!

சாலைமறியல் போராட்டம் – விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை தொடக்கம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் மேலான்மறை நாடு சாலையின் மோசமான நிலையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வலையப்பட்டி பகுதியில் மழைக்காலங்களில் சாலை முழுமையாக சேதமடைந்து, இரு…

சென்னை தேனாம்பேட்டையில் திசை புத்தக நிலையத்தின் 4ஆம் ஆண்டு விழா!

சென்னை — தேனாம்பேட்டை. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திசை புத்தக நிலையம் தனது 4ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து, சமூகத்திற்கு மாற்று சிந்தனையை வழங்கி வரும் திசை புத்தக நிலையம், கடந்த…

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – மதிப்பு ரூ.4.5 கோடி.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயற்சித்த உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏட்டையை சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறையில் தடுத்து நிறுத்தினர். சுமார் 1.5 கிலோ எடையுடைய, ரூ.4.5 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தனியார் பேருந்தில் மறைத்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

தஞ்சாவூரில் வாக்காளர் தீவிர திருத்தப் பணி!

ஆட்சித் தலைவர் நேரில் விழிப்புணர்வு பிரச்சாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி பிரியங்கா…

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்: கால அட்டவணை வெளியீடு.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம்…

தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் வாகன நுழைவு – மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்து…?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. தென்காசி நகரில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் புதிய பொது நூலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நூலகத்திற்கான பின்வாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தற்போது மெயின் கேட் வழியாகவே மக்கள் உள்ளே சென்று வருகின்றனர். இதன் காரணமாக,…

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!

கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும்…

“அவசர அறிக்கை”, மத்திய செய்தி – ஒளிபரப்பு துறை அமைச்சகம்…?

*போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை* 1867ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும், 1956ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின் படியும், ஒவ்வொரு…