தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.
அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக நிற்கும் ஒரு வீர பெண்மணி.
நேர்மையாக காவல்துறையில் பணிபுரிவது எவ்வளவு சவாலானது என்பதை இந்த வழக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும் சூழலில், உண்மைக்காக குரல் கொடுப்பது மிகுந்த தைரியம் தேவைப்படும் செயல்.
இவரைப் போன்றவர்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் பணியாற்றும் சூழல் உருவாக வேண்டும். நீதிக்காக நிற்கும் அதிகாரிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
பதவியை விட நீதியை முன்னிறுத்திய இந்த வீர பெண்மணிக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம் 💐
#தமிழ்நாடுகாவல்துறைதலைவர்
#தமிழ்நாடுகவர்னர்
#தமிழ்நாடுஅரசுமுதன்மைசெயலாளர்
#உயர்நீதிமன்றதலைமைநீதிபதி
