Wed. Feb 11th, 2026

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….!

🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் தர்ணா போராட்டத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று காலை 10 மணியளவில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம், தேர்தல் கால வாக்குறுதிகளின்படி ஓய்வூதியர்களுக்கான நலத்திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் நடைபெற்றது.

📌 முக்கிய கோரிக்கைகள்:

70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10% கூடுதல் ஓய்வூதியம்,

தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தல்,

சத்துணவு, அங்கன்வாடி மற்றும் ஊராட்சி உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850/-

தொகுப்பாக பெறப்பட்ட ஓய்வூதியத்தில் (Commutation) பிடித்தம் செய்யும் காலத்தை 11 ஆண்டுகளாக குறைத்தல்,

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, ஓய்வூதியர்களுக்கு காசில்லா மருத்துவம் உறுதி செய்தல்,

🏛️ போராட்டத்தின் அமைப்பு:

இந்த தர்ணா போராட்டத்திற்கு,

மாவட்ட தலைவர் : எம். பன்னீர்செல்லம் — தலைமை

மாவட்ட பொருளாளர் : பி. ஞானசேகரன் — வரவேற்புரை

மாவட்ட செயலாளர் : பி. குமரேசன் — கோரிக்கை விளக்கவுரை

🎤 வாழ்த்துரை & சிறப்புரை:

போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்தி பேசியவர்கள்:

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன்
அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் சி. ஞானசேகரன் ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் பி. லோகநாதன் அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் எ. கதிர் அகமது வட்டக்கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர்
மாநில செயலாளர் பா. ரவி சிறப்புரையாற்றினார்.
முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஜெயசந்திர பாக்கியராஜ் நன்றி கூறினார்.

👥 பங்கேற்றவர்கள்:

வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட ஒன்றியங்களிலிருந்து
👉 50 பெண் தோழர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

📣 முழக்கங்கள்:

“70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்”

“ஓய்வூதிய காப்பீட்டாளர்களுக்கு காசில்லா மருத்துவம் உறுதி செய் – தமிழக அரசே உறுதி செய்”
என வலியுறுத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

✍️ தி. தென்பாண்டியன்
வேலூர் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS