Fri. Feb 27th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

📰 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்
பெயர் மாற்றத்தை கண்டித்து குடியாத்தத்தில் தர்ணா.

குடியாத்தம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து, குடியாத்தம் யூனியன் அலுவலகம் எதிரே வாயில் கருப்பு கொடி கட்டி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த…

📰 குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில்
தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்பு…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில், ஜனவரி 30 அன்று இன்று காலை தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா பிரவணம் தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர் சிவக்குமார்,…

📰 திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 35-வது வார்டு கவுன்சிலர் ஜோதிபாசு கோரிக்கை…!

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 48 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பல்வேறு…

📰 டேனரி தொழிலாளர்கள் உயிர் பாதுகாப்பு கோரி
பேர்ணாம்பட்டில் CITU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட் பேருந்து நிலையம் அருகே, இந்திய தொழிற்சங்க மையம் (C.I.T.U) வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர்கள் செங்கொடி சங்கம் சார்பில், தமிழக அரசு மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து…

🛕 தைப்பூசம் திருவிழா: பழனியில் போக்குவரத்து மாற்றங்கள்.

🚨திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பழனி நகரில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும்…

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

8 அடி குச்சியில் தேசியக் கொடியா? — வெட்கக்கேடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. நாட்டின் உயரிய அடையாளமான தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, ஒரு முறையான கொடிக்கம்பம் கூட இல்லையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை 6 ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றம்.

விழுப்புரம் – ஜனவரி 29 விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், கடந்த ஆறு ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்து நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 08.08.2017 அன்று பெரியதச்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை…

குடியாத்தத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்
தொடர் காத்திருப்பு போராட்டம்.

குடியாத்தம் | ஜனவரி 29 வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டாரத் தலைவர் செந்தில்…