Thu. Feb 5th, 2026

திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 10,000 முகாம்களை முன்னிட்டு, நலத்திட்ட பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் விழா நடைபெற்றது.

ரூ.390 கோடி மதிப்பிலான நிறைவுற்ற பணிகள் தொடக்கம்.

இந்த விழாவில், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை, செஞ்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.390 கோடியே 44 லட்சம் மதிப்பிலான 199 நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.254 கோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல்.

மேலும், ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் ஊத்துக்குளி குடிநீர் திட்டம், பொம்மையார்பாளையத்தில் பாரதிதாசன் சிலையுடன் கூடிய அரங்கம் உள்ளிட்ட ரூ.254 கோடியே 29 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

‘என் கனவு என் எதிர்கா’ இணையதளம் தொடக்கம்.

இதனுடன், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக ‘என் கனவு என் எதிர்கா’ என்ற புதிய இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட பயனாளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு.

இந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி :
மதியழகன்
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்

By TN NEWS