Tue. Dec 16th, 2025

பொம்மிடி;
பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் பல நிலைகளில் முன்வைத்து வருகிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக தலைவர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு வழங்கப்பட்டது. அப்போது, இந்த கோரிக்கை குறித்து ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் எம். தம்பிதுரை அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் டாக்டர் தம்பிதுரை அவர்களை நேரில் சந்தித்து,

கோவை எக்ஸ்பிரஸ்,

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்,

பெங்களூரு மார்க்கத்தில் செல்லும் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்
ஆகிய ரயில்களுக்கு பொம்மிடியில் நிறுத்தம் வழங்க வேண்டுமென மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட டாக்டர் தம்பிதுரை, “பல ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸுக்கு நான் நிறுத்தம் பெற்றுத் தந்தேன்” என்று நினைவு கூர்ந்ததுடன், தற்போதைய கோரிக்கைக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில்;

வணிகர் சங்கத்தைச் சேர்ந்த B.R.M. மாதேஸ்,

பயணிகள் சங்க தலைவர் ஆஜம்கான்,

செயலாளர் ஜெபசிங்,

பொருளாளர் முனிரத்தினம்
ஆகியோர் கலந்து கொண்டனர்.


மண்டல செய்தியாளர்
ராஜீவ்காந்தி




By TN NEWS