நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு
வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத் தலைவருமான ஆயிஷா ஜாவித் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு மாநில கர்லா கட்டை சங்க பொதுச் செயலாளர் எஸ். கேசவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வழங்கினார்.
இந்த பயிற்சி முகாமில் கிரீன் வேலி பள்ளி, நெல்லூர் பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செவன்த் டே மெட்ரிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
உடற்கல்வி இயக்குநர்கள் புனிதவதி, செல்லப்பா, மாலதி உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், வேலூர் மாவட்ட நடிகர் சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார், இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் விஜயலட்சுமி, கீதாலட்சுமி, கு.பிரியா, புவியரசி, ஜெயந்தி, கிருஷ்ணவேணி, ராணிப்பேட்டை மாவட்ட கர்லா கட்டை விளையாட்டு சங்க செயலாளர் அசோக்குமார், பொருளாளர் மனோகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளர் பிரியதர்ஷனி நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்
நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு
வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத் தலைவருமான ஆயிஷா ஜாவித் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு மாநில கர்லா கட்டை சங்க பொதுச் செயலாளர் எஸ். கேசவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வழங்கினார்.
இந்த பயிற்சி முகாமில் கிரீன் வேலி பள்ளி, நெல்லூர் பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செவன்த் டே மெட்ரிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
உடற்கல்வி இயக்குநர்கள் புனிதவதி, செல்லப்பா, மாலதி உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், வேலூர் மாவட்ட நடிகர் சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார், இன்னர் வீல் சங்க நிர்வாகிகள் விஜயலட்சுமி, கீதாலட்சுமி, கு.பிரியா, புவியரசி, ஜெயந்தி, கிருஷ்ணவேணி, ராணிப்பேட்டை மாவட்ட கர்லா கட்டை விளையாட்டு சங்க செயலாளர் அசோக்குமார், பொருளாளர் மனோகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளர் பிரியதர்ஷனி நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்
