Sun. Jan 11th, 2026

மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பாக 16 முதல் 20 அடி அகலமுள்ள குருகலான தெருக்களில்,
நாம் மக்களாகிய நாம், ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.

குறுகலான தெருவில்,
👉 இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துகிறோம்.
👉 தெரு முழுவதையும் ஆக்கிரமித்து விடுகிறோம்.
👉 அவசர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழலை உருவாக்குகிறோம்.

இதன் விளைவு, ஒரு நாள் நமக்கே திரும்பி வரும் என்பதைக் கவனிப்பதில்லை.

Gate முன் வாகனம் – ஒரு குடும்பத்தின் பதற்றம்:

இரவு நேரங்களில்,
👉 வேறொருவர் வீட்டின் வாயில் (Gate) முன் வாகனங்களை நிறுத்தி விடுகிறோம்.

அந்த வீட்டின் உரிமையாளர்,
👉 திடீர் மருத்துவ அவசரம்
👉 வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்
👉 குடும்பச் சூழல்

எதற்காகவாவது வாகனத்தை வெளியே எடுக்க முடியாத பதற்றமான நிலையில் சிக்கிக் கொள்கிறார்.
இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை நாம் ஒருபோதும் உணர முயல்வதில்லை.

மாதம் ஒருமுறை நகரும் வாகனங்கள்:

தெருக்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு,
👉 தினமும் எடுத்துச் செல்லாமல்
👉 மாதத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மட்டுமே நகர்த்துகிறோம்.

அதற்காக,
👉 தார்ப்பாய் போட்டு மூடி விடுகிறோம்.

இதன் விளைவாக,
👉 குப்பைகள்
👉 நாய்கள் எடுத்து வரும் கழிவுகள்
👉 தூசி, மண்

எல்லாம் வாகனங்களின் அடியில் சேர்ந்து விடுகிறது.
இதனால், தூய்மை பணியாளர்கள் கூட குப்பையை அகற்ற முடியாத நிலை உருவாகிறது.

சேதமடைந்த வாகனங்கள் – தெருவின் சுமை.

நம்மில் சிலர்,
👉 ஓடாத
👉 சேதமடைந்த
👉 பயன்பாடற்ற

வாகனங்களை மாதக்கணக்காக, வருடக்கணக்காக தெருக்களில் விட்டுவிடுகிறோம்.
இது ஒரு தனிநபரின் அலட்சியம் மட்டுமல்ல;
👉 அது ஒரு பொது இடத்தின் ஆக்கிரமிப்பு.

வீட்டில் பார்க்கிங் இருந்தும்…

நம்மில் சிலரிடம்,
👉 வீட்டிற்குள்ளேயே வாகன நிறுத்தம் இருக்கும்.

ஆனால்,
👉 சோம்பேறித்தனம்
👉 “சற்று தூரம் நடக்க வேண்டாமே” என்ற மனநிலை

இதன் காரணமாக, வாகனங்களை தெருவில் நிறுத்துகிறோம்.
இந்த சோம்பேறித்தனம் தான், மற்றவர்களுக்கு சிரமமாக மாறுகிறது.

கடைகள் முன் வாகன நிறுத்தம் – வியாபாரிகளின் வேதனை.

நெருக்கடியான, கடைகள் அதிகம் உள்ள தெருக்களில்,
👉 கடைகளின் முன் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கிறோம்.

இதனால்,
👉 வாடிக்கையாளர்கள் வர முடியாமல்
👉 வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு குடும்பத்தின் தினசரி வருமானத்தில் நாம் மறைமுகமாக இடையூறு செய்கிறோம்.

Civic Sense – சட்டம் மட்டுமல்ல, மனநிலையும்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு,
👉 அபராதம் மட்டும் அல்ல
👉 போலீஸ் நடவடிக்கை மட்டும் அல்ல

குடிமை உணர்வு (Civic Sense) தான் முதன்மை.

“நான் சற்று சிரமப்பட்டால், மற்றவருக்கு சுகமாக இருக்கும்”
என்ற மனநிலையே ஒரு நல்ல சமூகத்தின் அடையாளம்.

மாநகராட்சி பொறுப்பு – ஒரு கோரிக்கை:

தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர்,
👉 தன் அலுவலகத்தைச் சுற்றி
👉 எந்த வாகனமும் நிறுத்தப்படாமல்
👉 ஒழுங்காக தெருக்களை பராமரிப்பது போல

அதே நடைமுறையை,
👉 மாநகராட்சியின் எல்லா தெருக்களிலும்
👉 சமமாக
👉 பாரபட்சமின்றி

செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

முடிவாக…

தெரு அரசின் சொத்து அல்ல.
👉 அது நம்முடையது.

அதை ஒழுங்காக வைத்துக்கொள்வதும்,
அதை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும்,
நம்முடைய சமூக பொறுப்பு.

சட்டத்தை விட,
👉 சுயக்கட்டுப்பாடே
👉 சமூகத்தை நாகரிகமாக மாற்றும்.

V. ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS