Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் உழவர் சந்தையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தையில், நம் இந்திய தாய் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. வேளாண்மை உற்பத்தியாளர் குறை தீர்வு குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்…

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள்.

தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி, பொன்னேரி, தீர்த்தமலை உள்ளிட்ட பல ஊராட்சிகளில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்கள் ஊராட்சி செயலாளர் முரளி சந்தானம் தலைமையில் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளர்கள்,…

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள்…

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 79வது சுதந்திர தின விழா!

உசிலம்பட்டி, ஆக.16 மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, மதுரை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தேசிய கொடியை…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் இன்று (14.08.2025) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியரின்…

சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் – வாராக்கடன் வசூல் நடவடிக்கை…?

பின்னணி: வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு. விமர்சனம்: “தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள்?” – சு. வெங்கடேசன் எம்.பி. 2014 முதல் பெயர், தொகையுடன் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும். மக்கள்…

பணி பாதுகாப்பு உண்டு – போராட்டம் கைவிட தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பிரியா வேண்டுகோள்…!

சென்னை, ரிப்பன் மாளிகை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம், அவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என சென்னை மேயர் ஆர். பிரியா வேண்டுகோள் விடுத்தார். பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு கோரிக்கைகளை தூய்மை பணியாளர்கள் முன்வைத்த நிலையில், பேச்சுவார்த்தையில்…

சைதை மேற்கு பகுதியில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நலப்பொருட்கள் வழங்கல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கிவைக்கப்பட்ட, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் “தாயுமானவர்” திட்டத்தின் அங்கமாக,மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. எம்.ஏ. சுப்பிரமணியன் அவர்கள், சைதை மேற்கு பகுதி 142வது…

குடியாத்தம் ஒன்றியத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாடி, மூங்கப்பட்டு ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், ஆகஸ்ட் 13 அன்று லட்சுமணபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆஷா…

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதை பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆகஸ்ட் 11 திங்களன்று மாவட்டதில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் இல்லா தமிழ்நாடு மற்றும் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக கூடாது என விழிப்புணர்வும்…