
டிசம்பர் 1 – குடியாத்தம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், மேல் செட்டிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடியாத்தம்–பேரணாம்பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.
தலைமைத்துவம் & தொடக்க நிகழ்வு:
மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் தோழர் C. தசரதன்.
பேரணாம்பட்டு ஒருங்கிணைப்பாளர் சி.மு. நடராஜன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார்.
வரவேற்புரை :
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க செயலாளர் தோழர் C.N. ராம்குமார் வழங்கினார்.
முன்னிலை :
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். ஆறுமுகம்,
எம். பஞ்சாட்சரம், எம். ரவி, எம். லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் கலந்துகொண்டனர்.
அஞ்சலி தீர்மானம் :
மோடிக்குப்பம் முன்னாள் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் தோழர் ஜெ. வெங்கடாஜலபதி முன்மொழிந்தார்.
உரை நிகழ்ச்சி :
மாநாட்டை தொடக்கி வைத்த மாவட்ட பொருளாளர் தோழர் ஜி. நரசிம்மன் பேசினார்.
முடித்து வைத்து மாவட்ட செயலாளர் தோழர் K. சாமிநாதன் உரையாற்றினார்.
அறிக்கைகள் :
செயலாளர் அறிக்கையை தோழர் எம். கோபால் முன்மொழிந்தார்.
வரவு–செலவு அறிக்கையை தாலுகா பொருளாளர் தோழர் ஜி. ரகுபதி சமர்ப்பித்தார்.
வாழ்த்துரைகள் :
AIAWU மாவட்ட தலைவர் பி. குணசேகரன்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ஏகலைவன்,
மாவட்ட செயலாளர் எம். சிவஞானம்,
கறிக்கோழி வளர்ப்பு சங்கம் – டி. கோவிந்தன்,
கரும்பு விவசாய சங்கம் – எஸ். குமாரி,
மாதர் சங்கம் – எஸ். கோடீஸ்வரன்,
DYFI – ஆர். பாபு,
CITU கட்டுமான தொழிலாளர் சங்கம் – எம். ராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தீர்மான உரைகள் :
மாவட்ட குழு உறுப்பினர்கள் பேரணாம்பட்டு நா.சே. பாஸ்கர்,
கார்கூர் ஜி. சரத்குமார்,
குடியாத்தம் அக்ராவரம் ஜி. சுப்பிரமணி ஆகியோர் மாநாட்டு தீர்மானங்களை விளக்கினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு :
தலைவர் – சி. தசரதன்
செயலாளர் – ஜி. சரத் குமார்
பொருளாளர் – எம். கோபால்
போராட்ட அறிவிப்பு :
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானமாக டிசம்பர் 16 அன்று குடியாத்தத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுடன் பெரிய அளவிலான போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
செய்தி :
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
K. V. ராஜேந்திரன்
