குடியாத்தம், டிசம்பர் 18 :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.
வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.
நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, விவசாயிகளின் பல்வேறு குறைகளை முன்வைத்து பேசினர்.
அதில்,
சேம்பள்ளி ஊராட்சி கொட்டாரமடுகு பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான சுமார் 50 மீட்டர் தொலைவிலான பாதை ஜல்லிக்கற்கள், மணல் பரப்பி சமன் செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதியடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையின் அனுமதி பெற்று, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
வனத்துறை ஒட்டிய பகுதிகளில் சிலர் விறகு வெட்டி கடத்திச் செல்வதால் மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அனுப்பு பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களை காட்டு பன்றிகள் மிதித்து சேதப்படுத்தியுள்ளன. இதனை கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம், டிசம்பர் 18 :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.
வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.
நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, விவசாயிகளின் பல்வேறு குறைகளை முன்வைத்து பேசினர்.
அதில்,
சேம்பள்ளி ஊராட்சி கொட்டாரமடுகு பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான சுமார் 50 மீட்டர் தொலைவிலான பாதை ஜல்லிக்கற்கள், மணல் பரப்பி சமன் செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதியடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையின் அனுமதி பெற்று, தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
வனத்துறை ஒட்டிய பகுதிகளில் சிலர் விறகு வெட்டி கடத்திச் செல்வதால் மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அனுப்பு பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களை காட்டு பன்றிகள் மிதித்து சேதப்படுத்தியுள்ளன. இதனை கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
