Sat. Jan 10th, 2026

குடியாத்தம் | ஜனவரி 2

2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு, முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான சரகுப்பம் திரு. மு. சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் குறைதீர்வுக் குழு உறுப்பினர்கள் அடங்கிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்,
வேலூர் மாவட்ட நிர்வாக நீதிபதி, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து,
சால்வை அணிவித்து மரியாதை செய்து, புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
மாவட்ட துணைத் தலைவர் – சூராளூர் பா. ஆனந்தன்
மாவட்ட செயலாளர் – கொட்டாவூர் சிவாஜி
மாவட்ட இணைச் செயலாளர் – உப்பரபள்ளி ஏ.சி. பாபு நாயுடு
மாவட்ட இளைஞர் அணி தலைவர் – லட்சுமணன்
குடியாத்தம் ஒன்றிய செயலாளர் – மேல்முட்டுக்கூர் ஸ்ரீதர்
அணைக்கட்டு ஒன்றிய தலைவர் – மேலரசம்பட்டு கோ. செந்தாமரை
அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் – மேலரசம்பட்டு மகேந்திரன்
காப்பீட்டு அணி – எல்.ஐ.சி. பார்த்தீபன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS