குடியாத்தம் | டிசம்பர் 26
குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள், நல்லாட்சி தினமாக இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் திரு. தசரதன் விநாயகம் ஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கியதுடன், மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கள் வழங்கி விழாவை சிறப்பித்தார்.
விழாவிற்கு குடியாத்தம் நகர தலைவர் திரு. எம்.கே. ஜெகன் அவர்கள் தலைமை தாங்கினார்.
வேலூர் மாவட்ட செயலாளர் திரு. த. சாய் ஆனந்த்,
மாவட்ட துணைத் தலைவர் திரு. ஸ்ரீகாந்த்,
மாவட்ட பொது செயலாளர் திரு. தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் அணி நிர்வாகிகள் ஸ்ரீதேவி, மஞ்சு கோவிந்தராஜ், ரேகா,
நகர செயலாளர் திரு. கணேசன்,
நகர துணைத் தலைவர் நித்தியானந்தம்,
இளங்கோவன், வெங்கடேசன், சண்முகம், பாஸ்கர்,
அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் வாகீஸ்வரன், ரங்கநாதன், சரவணன், எல். எஸ். கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் குடியாத்தம் நகர செயலாளர் திரு. டி. எஸ். ராஜா அவர்கள் வரவேற்றார்.
தேசத்தின் வளர்ச்சி, நல்லாட்சி, நேர்மை ஆகியவற்றை அரசியலில் நடைமுறைப்படுத்திய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா சிறப்பாக அமைந்தது.
கே.வி. ராஜேந்திரன்
தாலுக்கா செய்தியாளர்,
குடியாத்தம்
குடியாத்தம் | டிசம்பர் 26
குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள், நல்லாட்சி தினமாக இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் திரு. தசரதன் விநாயகம் ஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கியதுடன், மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கள் வழங்கி விழாவை சிறப்பித்தார்.
விழாவிற்கு குடியாத்தம் நகர தலைவர் திரு. எம்.கே. ஜெகன் அவர்கள் தலைமை தாங்கினார்.
வேலூர் மாவட்ட செயலாளர் திரு. த. சாய் ஆனந்த்,
மாவட்ட துணைத் தலைவர் திரு. ஸ்ரீகாந்த்,
மாவட்ட பொது செயலாளர் திரு. தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் அணி நிர்வாகிகள் ஸ்ரீதேவி, மஞ்சு கோவிந்தராஜ், ரேகா,
நகர செயலாளர் திரு. கணேசன்,
நகர துணைத் தலைவர் நித்தியானந்தம்,
இளங்கோவன், வெங்கடேசன், சண்முகம், பாஸ்கர்,
அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் வாகீஸ்வரன், ரங்கநாதன், சரவணன், எல். எஸ். கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் குடியாத்தம் நகர செயலாளர் திரு. டி. எஸ். ராஜா அவர்கள் வரவேற்றார்.
தேசத்தின் வளர்ச்சி, நல்லாட்சி, நேர்மை ஆகியவற்றை அரசியலில் நடைமுறைப்படுத்திய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் இந்த விழா சிறப்பாக அமைந்தது.
கே.வி. ராஜேந்திரன்
தாலுக்கா செய்தியாளர்,
குடியாத்தம்
