துக்க நிகழ்வுக்காக சொந்த ஊருக்கு சென்ற போது நடந்த துயரம்…!
ஆரணி அருகே, ரயிலில் பயணம் செய்த கணவன்–மனைவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது, ரயில் பாதையில் இருந்து கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு, உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திடீர் விபத்தால் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த விபத்து செய்தி…!
ஷேக் முகைதீன்
