Sat. Jan 10th, 2026

திருவண்ணாமலை:
அண்ணாமலையாரின் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரம், இன்று போக்குவரத்து நெரிசலால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கடமையை சரியாக நிறைவேற்றாததால், மாநகர மக்கள் தினமும் சித்திரவதை அனுபவித்து வருகின்றனர்.

“முதலமைச்சர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் வருகையின் போது இப்படியான போக்குவரத்து குழப்பத்தை காவல்துறை அனுமதிப்பார்களா?”
என்ற கேள்வி இன்று பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஆட்சியாளர்களின் மீது இருக்கும் பயம்,
அண்ணாமலையாரின் மீது ஏன் இல்லை?
என்ற ஆதங்கமும், கோபமும் மக்கள் மனதில் கொந்தளிக்கிறது.

இந்த போக்குவரத்து நெரிசலின் உச்சமாக, இன்றைய தினம் 108 அவசர ஊர்தி கூட வழி இல்லாமல் ஊர்ந்து சென்றது என்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ அவசரத்தில் ஒரு உயிருக்கு நேரம் தான் முக்கியம். அந்த நேரத்தையே போக்குவரத்து நெரிசல் பறித்துக் கொள்வது மிக ஆபத்தான சூழல்.

இந்நிலையில்,
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் செயல்திறன் மிக மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு இயந்திரங்கள் உண்மையில் செயல்படுகிறதா?
என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

மாநகர மக்களின் கோரிக்கை :

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடி போர்க்கால நடவடிக்கை

முக்கிய சாலைகளில் நிரந்தர போக்குவரத்து திட்டம்

காவல்துறையின் தொடர்ச்சியான கண்காணிப்பு

அவசர ஊர்திகளுக்கு தனி வழித்தடம்

பக்தர்கள், உள்ளூர் மக்கள் இருவருக்கும் சமநிலை ஏற்படுத்தும் நிர்வாக நடைமுறை

ஆண்டவரின் நகரத்தில் மக்கள் தினமும் வேதனைப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

திருவண்ணாமலை மாநகர மக்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்

🔖 TAG:
@CMOTamilNadu
@mkstalin
@Udhaystalin
@tnpoliceoffl
@tnhomeoffl
@CollectorTVM
@TvmDistrict

🏷️ Hashtags:
#Tiruvannamalai
#TrafficCrisis
#SaveTiruvannamalai
#PublicSafety
#AmbulanceBlocked
#AdministrativeFailure
#PeopleFirst

By TN NEWS