குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 750 பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கே.வி.குப்பம் ஒன்றிய புதிய நீதிக்கட்சி 2வது வார்டு சார்பாக 750 பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் S. சீனிவாசன் மற்றும் ராம இளங்கோவன் தலைமையேற்றனர்.
நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தவர் மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு V. பாபு.
தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் மான்ஸ்டர் T. பிரவீன் குமார், அம்பேத்கர் பேரவை மண்டல செயலாளர் நத்தம் R. நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றியுரை ஒன்றிய தலைவர் சிக்கன் குமரவேல் வழங்கினார். மேலும் மாவட்டத் தலைவர்கள் இளஞ்செழியன் மற்றும் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
– குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்