Mon. Aug 25th, 2025

குடியாத்தம்:
குடியாத்தம் கார்த்திகேயபுரத்தில் அமைந்துள்ள அத்தி கிளை மருத்துவமனை மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர்.

இந்த முகாம் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ.சௌந்தரராஜன் மற்றும் டாக்டர் சௌ.சுகநாதன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

முகாமை குடியாத்தம் டி.எஸ்.பி. எஸ்.ஜி.சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அவர் பொதுமக்களுக்கு கண் ஆரோக்கியம் மற்றும் பரிசோதனையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.எம்.சுஜானி மற்றும் ஜி.எம்.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ.கென்னடி முன்னிலை வகித்தார். தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள் மற்றும் அத்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் இணைந்து கண் பரிசோதனை செய்து தேவையான ஆலோசனையும் பயிற்சியும் வழங்கினர்.

குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.குமரவேல் மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முகாமில் 96 பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இறுதியில் அத்தி மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் செய்தியாளர்
ராஜேந்திரன்

 

By TN NEWS