தருமபுரி:
மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மற்றும் நிறுவனர் ச. ஜெயக்குமார் தலைமையில் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில பொருளாளர் அரங்கநாதன், மாவட்ட செயலாளர் சுசீந்திரன், மாநில மகளிர் அணி செயலாளர் சுதா, மாநில அமைப்பு பொது செயலாளர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன், வசந்த், பிரகாசம், ராஜேந்திரன், பார்தசாரதி, நவின், விவசாய அணி சரவணன், அரூர் ஒன்றிய தலைவர் சித்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தஞ்சாவூர், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் (ஆண்கள், பெண்கள்) கலந்து கொண்டனர்.
– பசுபதி, தலைமை செய்தியாளர்