ஊட்டி, மார்ச் 23:
நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 11 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
கோரிக்கைகள்:
1️⃣ E-Pass நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
2️⃣ மாஸ்டர் பிளான் சட்டத்தில் திருத்தம் செய்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டபூர்வமாக மாற்ற வேண்டும்.
3️⃣ ஊட்டி – குன்னூர் நகராட்சி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
4️⃣ கூடலூர் மக்களின் நீண்ட கால நில பிரச்சனை (Section 17)க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
5️⃣ தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
6️⃣ மாவட்டத்தில் புதிய வீடு கட்ட அனுமதி கேட்ட 8000 விண்ணப்பங்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
7️⃣ வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் ஓலா, உபர், ரெட் டாக்ஸி போன்ற தனியார் டாக்ஸி சேவைகளை தடை செய்ய வேண்டும்.
8️⃣ மஞ்சூர் – முள்ளி வழியாக மன்னார்காடு (கேரளா) செல்லும் பாதையை மீண்டும் திறக்க வேண்டும்.
9️⃣ சில்லல்லா நீர்த்தேக்க திட்டத்தை கைவிட வேண்டும்.
🔟 பிளாஸ்டிக் தடைக்கு மாற்றாக, முறையான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
1️⃣1️⃣ அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் நுழைவு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணங்களை குறைத்து, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
போராட்ட நடவடிக்கைகள்:
📌 29.03.2025 (சனிக்கிழமை) முதல் – கடைகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.
📌 02.04.2025 (புதன்கிழமை) – 24 மணி நேர பொது வேலை நிறுத்தம், அனைத்து கடைகளும் மூடப்படும்.
நீலகிரி மாவட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க மக்கள், வணிகர்கள், பொதுநல சங்கங்கள், விவசாயிகள் அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக்கொள்கிறது.
— தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நீலகிரி மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு
நமது செய்தியாளர் – பஷீர் அஹமது – ஊட்டி – நீலகிரி மாவட்டம்.

