Sun. Jan 11th, 2026

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுத்துள்ளது திமுக அரசு. இனிமேல் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் இருக்காது என்று மக்கள் பயப்படுகிறார்கள்.இந்த 500 கவர்ன்மென்ட் ஸ்கூல்கள் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஏற்கனவே தனியார் பள்ளிகளை நடத்தி வருபவர்களில் பலர் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் தான் என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் படிக்கக்கூடாது என போராட்டங்களை தற்போது எதிர்க்கட்சிகள் நடத்தாமல் திமுகவை தோற்கடிக்க முடியாது. பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திமுக அரசை எதிர்த்து இனியாவது போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முன் வர வேண்டும்.இல்லாவிட்டால் அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளாக மாறி விடும் அபாயம் உள்ளது. அதற்கு பிறகு ஏழை எளிய மாணவர்கள்-மாணவிகள் ஒரு போதும் படிக்க முடியாது. தமிழ்நாடு ஆயிரம் ஆண்டுகள் பின்னால் போய் விடும். நாம் பின்தங்கி விடுவோம்.

அமல்ராஜ் மாவட்ட தலைமை நிருபர்- தென்காசி.

By TN NEWS