Sat. Jan 10th, 2026

ஜனவரி 3

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரிய வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை சிறப்பாக நடத்தப்பட்டது. பக்தர்களை ஈர்க்கும் வகையில் செய்யப்பட்ட அலங்காரத்தில், நடராஜப் பெருமான் அருள்பாலித்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா திரு. S. சிவக்குமார்,
கோயில் நிர்வாக மேலாளர் திரு. D. சங்கர்,
கோயில் குருக்கள் திரு. R. சந்திரசேகர் மற்றும்
கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
K. V. ராஜேந்திரன்

By TN NEWS