Sat. Jan 10th, 2026

டிசம்பர் 31
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட்டி வட்டாரம் மசிகம் கிராமத்தில், 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

மத்தியிலுள்ள பாஜக அரசு, உலகின் மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை, சமீபத்தில் “விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு திட்டம் (VB G RAM G)” என மாற்றியுள்ளதாகவும், இது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் நடவடிக்கையாகும் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த பெயர் மாற்றத்தை நியாயப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் பாஜக-வின் பிரச்சாரங்களை முறியடிக்கும் நோக்கில், வேலூர் மாவட்ட RGPRS சார்பில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

MGNREGA – VB G RAM G : வேறுபாடுகள் விளக்கம்
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் கு. சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கும் (MGNREGA) மோடி அரசு கொண்டு வந்ததாக கூறப்படும் விக்சித் பாரத் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கும் (VB G RAM G) இடையேயான வேறுபாடுகளை, 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு விரிவாக விளக்கினார்.

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர் விளக்கவுரை ஆற்றினார்.
தமிழ்நாடு RGPRS துணைத் தலைவர் ராஜசேகரன், 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வேலூர் மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல் அறிமுக உரையாற்றினார்.

கலந்து கொண்டோர்:
RGPRS நிர்வாகிகள் கோவிந்தசாமி, மகேஷ்வரன், மோகன், ரையான், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்.

By TN NEWS