தருமபுரி | டிசம்பர் 28, 2025
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி மகளிர் உயர்நிலைப்பள்ளி, அமலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளி மற்றும் செல்லியம்பட்டி ஆர்.சி. நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில், மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முகாம்களில்,
புதிய வாக்காளர் சேர்த்தல்
வாக்காளர் நீக்கம்
பெயர், வயது, முகவரி திருத்தம்
பாகம் மற்றும் முகவரி மாற்றம்
போன்ற பணிகளுக்காக படிவம் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அமைவிட அலுவலர்கள் முகாம்களில் பணியாற்றி வருகின்றனர்.
தகுதியுள்ள, தற்போது 18 வயது நிறைவடைந்த நபர்களும், மேலும் 01.10.2026-ம் தேதிக்குள் 18 வயது நிறைவடைய உள்ள நபர்களும், உரிய ஆவணங்களுடன் படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து, அருகிலுள்ள வாக்குச்சாவடி முகாம்களில் அளித்து வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், பொதுமக்கள் இணைய வழியாகவும் வாக்காளர் பதிவு மற்றும் திருத்த விண்ணப்பங்களை அளிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. தவறான தகவல் அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் செம்மையாக தயாரிக்கவும், வலுவான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கவும், வாக்களிப்பது நமது கடமை என்பதால், அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தருமபுரி வட்டாட்சியர் திரு. சௌகத் அலி, பாலக்கோடு வட்டாட்சியர் திரு. அசோக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மண்டல செய்தியாளர் :
D. ராஜீவ் காந்தி
தருமபுரி | டிசம்பர் 28, 2025
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி மகளிர் உயர்நிலைப்பள்ளி, அமலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளி மற்றும் செல்லியம்பட்டி ஆர்.சி. நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில், மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முகாம்களில்,
புதிய வாக்காளர் சேர்த்தல்
வாக்காளர் நீக்கம்
பெயர், வயது, முகவரி திருத்தம்
பாகம் மற்றும் முகவரி மாற்றம்
போன்ற பணிகளுக்காக படிவம் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அமைவிட அலுவலர்கள் முகாம்களில் பணியாற்றி வருகின்றனர்.
தகுதியுள்ள, தற்போது 18 வயது நிறைவடைந்த நபர்களும், மேலும் 01.10.2026-ம் தேதிக்குள் 18 வயது நிறைவடைய உள்ள நபர்களும், உரிய ஆவணங்களுடன் படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து, அருகிலுள்ள வாக்குச்சாவடி முகாம்களில் அளித்து வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், பொதுமக்கள் இணைய வழியாகவும் வாக்காளர் பதிவு மற்றும் திருத்த விண்ணப்பங்களை அளிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. தவறான தகவல் அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் செம்மையாக தயாரிக்கவும், வலுவான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கவும், வாக்களிப்பது நமது கடமை என்பதால், அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தருமபுரி வட்டாட்சியர் திரு. சௌகத் அலி, பாலக்கோடு வட்டாட்சியர் திரு. அசோக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மண்டல செய்தியாளர் :
D. ராஜீவ் காந்தி
