Tue. Dec 16th, 2025



டிசம்பர் 3
வேலூர் மாவட்டம் – குடியாத்தம்
குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள்:

வி. குபேந்திரன் – நகர செயலாளர்

எஸ். சிலம்பரசன் – தாலுகா செயலாளர்

சி. சரவணன் – பேரணாம்பட்டு தொகுதி செயலாளர்

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்:

எஸ்.டி. சங்கரி – மாவட்ட செயலாளர்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்:

பி. காத்தவராயன்

கே. சாமிநாதன்

எஸ். ஏகலைவன்

மாவட்ட குழு உறுப்பினர்கள்:

பி. குணசேகரன்

கே. செம்மலர்

சு. சம்பத்குமார்

சி.எம். நடராஜன்

பா. சாமிநாதன்

கட்சியினர் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:

ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:

1. அரசு மருத்துவமனை திறப்பு கோரிக்கை:

அரசு நிதியில் கட்டப்பட்ட குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.

2. பகவத்சிங் சமுதாய கூடம் திறப்பு:

2006–2007 நிதியாண்டில் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட மாட்டு சந்தை அருகேயுள்ள பகவத்சிங் சமுதாய கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட வேண்டும்.

3. மருத்துவ பணியாளர்கள் நியமனம்

புதிய மருத்துவமனைக்கு:

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள்
பணியாளர்கள் ஆகியோர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

4. உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு:

மருத்துவமனையில் தேவையான அனைத்துத் உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

5. வாகன நிறுத்துமிடம் அமைப்பு:

பொதுமக்கள் பயன்படுத்த வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சி வலியுறுத்தியது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS