சென்னை, 21 நவம்பர் 2025:
மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025-ஐ முன்னிட்டு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களின் தலைமையில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” எனும் மனிதநேய காலை உணவு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக தொடர்ந்து 275வது நாளை எட்டியது.
இந்நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சி நடைபெற்ற இடங்கள்:
68வது வார்டு, கொளத்தூர், பெரியார் நகர், பாலசுப்பிரமணியன் சாலை, மைக்கேல் உணவகம் அருகில்,
67Aவது வார்டு, செம்பியம், பல்லவன் சாலை, திரு.வி.க.நகர், கால்பந்தாட்ட மைதானம் எதிரில்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
கே. என். நேரு – நிர்வாகத்துறை அமைச்சர்
கலாநிதி வீராசாமி – வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
பங்கேற்றோர்:
கொளத்தூர் பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளிதரன்,
நாகராஜ், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர் எம். யாசர் அலி


