வேலூர், அக்.31:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மேல்முட்டுக்கூர் ஊராட்சியில், ₹14.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையமும், ₹5.25 லட்சம் மதிப்பீட்டில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பும் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹணா தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர், துணைத் தலைவர் நித்யா வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர் என்.இ. சத்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தைக் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், ஊராட்சி செயலர் ராஜேஷ், அங்கன்வாடி மேற்பார்வையாளர் கமலா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இறுதியில் அங்கன்வாடி பணியாளர் திலகவதி நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
வேலூர், அக்.31:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மேல்முட்டுக்கூர் ஊராட்சியில், ₹14.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையமும், ₹5.25 லட்சம் மதிப்பீட்டில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பும் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹணா தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர், துணைத் தலைவர் நித்யா வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர் என்.இ. சத்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தைக் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், ஊராட்சி செயலர் ராஜேஷ், அங்கன்வாடி மேற்பார்வையாளர் கமலா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இறுதியில் அங்கன்வாடி பணியாளர் திலகவதி நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
