Thu. Nov 20th, 2025

 


வேலூர், அக்.31
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் இன்று காலை ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையமும், கல் மடுகு பகுதியில் ₹5.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுத்திகரிப்பு குடிநீர் நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமை தாங்கினார்.
ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் எண்.இ. சத்யானந்தம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இறுதியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர் கமலா நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்: ராஜேந்திரன்

By TN NEWS