🌾 ஓட்டேரி ஏரி நிரம்பி வழிந்தது – மகிழ்ச்சியில் பொதுமக்கள் கிடா வெட்டி சிறப்பு பூஜை!
📍 செட்டிகுப்பம், குடியாத்தம் ஒன்றியம் – அக்டோபர் 27
செட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓட்டேரி ஏரி சமீபத்திய மழையால் முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது. நீர் நிரம்பிய மகிழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து, இயற்கைக்கு நன்றி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம், துணைத் தலைவர் கே. கே. முரளி, வட்டாட்சியர் கி. பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, ஒன்றிய குழு உறுப்பினர் மலர்வேணி சின்னத்தம்பி, மேல் முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர், விவசாய சங்க பிரதிநிதிகள் எம். சேகர், பழனி வேலன், துரைசெல்வம், பிரேம்குமார், மகேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீரின் அருளால் மகிழ்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
🖋️ செய்தி: கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
