Thu. Nov 20th, 2025



📍 வேலூர் மாவட்டம் — அக்டோபர் 14:
ஆந்திரா–தமிழ்நாடு எல்லையில் உள்ள மோர்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் பாசனக் கால்வாய் வழியாக அகராவரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் சேர்ந்து வழிந்தது.

அந்த நீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதால், சாலைகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து, மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானனர்.

தகவல் அறிந்த அக்ரஹாரம் ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனால் நீர் ஓட்டம் சீரடைந்து, மக்கள் நிம்மதி அடைந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் — கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS