வேலூர் மாவட்டம், அக்டோபர் 14:
குடியாத்தம் செ.ருங்கி, அம்பேத்கர் சிலை அருகில் இந்தியாவின் இறையாண்மையை காக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு பி.ஆர். கவாய் அவர்களுக்கு எதிராக காலணியை வீசிய சாதிவெறி சனாதன சங்கி ராகேஷ் கிஷோரை கைது செய்யக் கோரி இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மாணவரணி செயலாளர் சரத்குமார் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் விஜயரங்கம், ஆசிரியர் கோடீஸ்வரன், ஓய்வு உதவி கலெக்டர் கணேசன், ஆம்பூர் நகர பொறுப்பாளர் நெடுமாறன், ஆசிரியர் பாஸ்கர், ஓய்வு தபால் துறை சுகுமார், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் மது உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ராகேஷ் கிஷோரை தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சின்னப்பதாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், பாஸ்கர், செந்தில், ஜெலேந்திரன், தமிழரசன், ஏகாதாஸ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
வேலூர் மாவட்டம், அக்டோபர் 14:
குடியாத்தம் செ.ருங்கி, அம்பேத்கர் சிலை அருகில் இந்தியாவின் இறையாண்மையை காக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு பி.ஆர். கவாய் அவர்களுக்கு எதிராக காலணியை வீசிய சாதிவெறி சனாதன சங்கி ராகேஷ் கிஷோரை கைது செய்யக் கோரி இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மாணவரணி செயலாளர் சரத்குமார் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் விஜயரங்கம், ஆசிரியர் கோடீஸ்வரன், ஓய்வு உதவி கலெக்டர் கணேசன், ஆம்பூர் நகர பொறுப்பாளர் நெடுமாறன், ஆசிரியர் பாஸ்கர், ஓய்வு தபால் துறை சுகுமார், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் மது உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ராகேஷ் கிஷோரை தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சின்னப்பதாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், பாஸ்கர், செந்தில், ஜெலேந்திரன், தமிழரசன், ஏகாதாஸ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
