Sun. Oct 5th, 2025



பள்ளிகொண்டா, செப்டம்பர் 14:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் சார்பில், தெய்வத்திரு கெஜலக்ஷ்மி அம்மையார் நினைவாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமினை அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் சகாதேவன் தலைமையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் யுவராஜ் முன்னிலையில் நடத்தினார். குத்துவிளக்கு ஏற்றி முகாமை சகாதேவன் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் பொது மற்றும் ஆய்வக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சந்தானகோபால், குழந்தைகள் நல மருத்துவர் மருத்துவர் ஹேமலதா, ஸ்ரீ சாய் ஹியரிங், வேலூர் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் காது, மூக்கு, தொண்டை, எலும்பு, குழந்தைகள் நல மருத்துவம், பிசியோதெரபி ஆகியவற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் ரத்த அளவு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளால் பயனடைந்தனர்.

குடியாத்தம் தொகுதி செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS