Sun. Oct 5th, 2025


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் மற்றும் கூடநகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன். செல்வம் குமார். தலைமையில் நடைபெற்றது


இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி இ.ஆ.ப. பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் அடையாள அட்டைகளை வழங்கினார்

இந்நிகழ்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி வட்டாட்சியர் பழனி  ஒன்றிய குழு உறுப்பினர்கள் சூரியகலா மனோஜ்குமார். ராஜேஸ்வரி நத்தம் பிரிதீஷ். கூடநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமாரன்.‌ மேல் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ராஜ்குமார் முகாமினை முன்னிலை வகித்தனர்


இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம் குடும்ப அட்டை இலவச வீட்டு மனை பட்டார்கள் பெயர் மாற்றம் மின் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களை முகாமில் கொடுத்தனர்


நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் துணைத் தலைவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்  அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல் ஆலத்தூர் கூடநகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

By TN NEWS