வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் அனங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமையேற்றார்.
எட்டாம் வகுப்பு முதல் இடம் பெற்ற செல்வி ரம்யா ரூ.5,000 பரிசு பெற்றார்.
இரண்டாம் இடம் பெற்ற தாட்சாயணி ரூ.3,000,
மூன்றாம் இடம் பெற்ற ஷர்மிளா ரூ.2,000 பரிசுகளை பெற்றனர்.
இந்த பரிசுத் தொகைகளை ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி முருகேசன் தன் சொந்த செலவில் வழங்கி மாணவிகளை பாராட்டி சால்வைகள் அணிவித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர் வெங்கட் குமார் மாணவிகளை வாழ்த்தி, தொடர்ந்து சிறந்து விளங்க ஊக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமாரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன