வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம் ஆகஸ்ட் 19, 2025 அன்று காலை 11 மணியளவில் குடியாத்தம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆர். மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சங்கக் கொடியை தாலுக்கா துணைத் தலைவர் ஜி.வி. முனிசாமி ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை எம். அண்ணாமலை வாசித்தார்.
எம். கோபி வரவேற்புரை ஆற்றிய கூட்டத்தில், கே. சேகர், கே. மணி, ஆர். குமார், ஜி. மார்கபந்து, எஸ். வெங்கடேசன், வி. ரேகா, பி. தசரதன், எஸ். வினாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
CITU மாவட்ட துணைத் தலைவர் பி. காத்தவராயன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செயலாளர் அறிக்கையை சி. சரவணன் வாசித்தார்; நிதி நிலை அறிக்கையை எஸ். சிலம்பரசன் முன்வைத்தார்.
புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, சங்க மாவட்ட பொது செயலாளர் வி. நாகேந்திரன் நிறைவுரை ஆற்றினார். நன்றியுரை டி. தண்டபாணி வழங்கினார்.
புதிய நிர்வாகிகள்
தலைவர் : ஆர். மகாதேவன்
செயலாளர் : சி. சரவணன்
பொருளாளர் : எஸ். சிலம்பரசன்
17 நிர்வாகிகள் மற்றும் 37 பேர் கொண்ட தாலுக்கா குழு தேர்வு செய்யப்பட்டனர்.
📌 செய்தியாளர்:
குடியாத்தம் தாலுக்கா – கே.வி. ராஜேந்திரன்