பேரணாம்பட்டு அருகே நீர் நிலை பொரம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, குண்டலபல்லி மலைப்பாதை வழியாக சாத்கர் – பேரணாம்பட்டு – குடியாத்தம் செல்லும் சாலையில், புத்து கோவில் அருகே உள்ள மேம்பாலம் வழியாக கொட்டாறு ஓடுகிறது.
இக்கொட்டாறு பக்கத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள நீர் நிலை ஆத்து பொரம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். கொட்டாற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 100 அடிக்கு மேல் மொரும்பு, செம்மண் உள்ளிட்டவற்றை கொட்டி நிலத்தை நிரப்பி அதன் உயரத்தை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வருவாய் துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து, நீர் நிலை ஆத்து பொரம்போக்கு இடங்களில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
🖊️ கே.வி. ராஜேந்திரன்
செய்தியாளர், குடியாத்தம் தாலுக்கா