குடியாத்தம் | ஜனவரி 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வளத்தூர் கிளை மற்றும் குடியாத்தம் தெற்கு ஒன்றிய குழு சார்பில், வளத்தூர் கிராம மக்களுக்கு இணை வழி பட்டா வழங்க வலியுறுத்தி இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வளத்தூர் கிராமம், நத்தம் சர்வே எண் 154/A பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், மசூதிகள், பள்ளி உள்ளிட்டவை பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், அதில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை உரிய பட்டா வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் உடனடியாக தலையிட்டு, வளத்தூர் கிராம மக்களுக்கு இணை வழி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் என். ரபிக் அஹமத், எம். நயாஸ் அஹமத், என். நதீம் அஹமத் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி சேகர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் டி.எஸ். சந்திரன், முன்னாள் வார்டு உறுப்பினர் தன்சீர் அ. ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில குழு உறுப்பினர் எல். மணி, மாவட்ட பொருளாளர் எஸ். காவேரி, மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சி. பிரேம் குமார், ஆலியார் அத்தாவுல்லா, கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட குழு உறுப்பினர் துரை செல்வம், பேர்ணாம்பட்டு செயலாளர் எஸ். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், CPI மாவட்ட செயலாளருமான ஜி. லதா, வளத்தூர் கிராம மக்களின் நில உரிமைப் பிரச்சனை குறித்து உரையாற்றினார்.
வளத்தூர் ஊராட்சியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் 167 குடும்பங்களுக்கு உடனடியாக இணை வழி பட்டா வழங்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 1989 ஆம் ஆண்டு UDR (Urban Development Scheme) திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், வளத்தூர் கிராம மக்களுக்கு மட்டும் அது வழங்கப்படாதது அநீதி என்றும், இந்த பாகுபாட்டை உடனடியாக களைந்து நியாயம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் ரசினாதப்ரேஸ் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் | ஜனவரி 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வளத்தூர் கிளை மற்றும் குடியாத்தம் தெற்கு ஒன்றிய குழு சார்பில், வளத்தூர் கிராம மக்களுக்கு இணை வழி பட்டா வழங்க வலியுறுத்தி இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வளத்தூர் கிராமம், நத்தம் சர்வே எண் 154/A பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், மசூதிகள், பள்ளி உள்ளிட்டவை பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், அதில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை உரிய பட்டா வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் உடனடியாக தலையிட்டு, வளத்தூர் கிராம மக்களுக்கு இணை வழி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் என். ரபிக் அஹமத், எம். நயாஸ் அஹமத், என். நதீம் அஹமத் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி சேகர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் டி.எஸ். சந்திரன், முன்னாள் வார்டு உறுப்பினர் தன்சீர் அ. ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில குழு உறுப்பினர் எல். மணி, மாவட்ட பொருளாளர் எஸ். காவேரி, மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சி. பிரேம் குமார், ஆலியார் அத்தாவுல்லா, கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட குழு உறுப்பினர் துரை செல்வம், பேர்ணாம்பட்டு செயலாளர் எஸ். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், CPI மாவட்ட செயலாளருமான ஜி. லதா, வளத்தூர் கிராம மக்களின் நில உரிமைப் பிரச்சனை குறித்து உரையாற்றினார்.
வளத்தூர் ஊராட்சியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் 167 குடும்பங்களுக்கு உடனடியாக இணை வழி பட்டா வழங்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 1989 ஆம் ஆண்டு UDR (Urban Development Scheme) திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், வளத்தூர் கிராம மக்களுக்கு மட்டும் அது வழங்கப்படாதது அநீதி என்றும், இந்த பாகுபாட்டை உடனடியாக களைந்து நியாயம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் ரசினாதப்ரேஸ் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்
