Fri. Aug 22nd, 2025



*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.*

*🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில்  தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த செல்வம்முருகன்  (எ) முருகன்(51) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.*

*🚨💥 இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பேபி அவர்கள், நீதிமன்ற முதல் நிலை காவலர் திருமதி. மாரியம்மாள் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்  திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (11.08.2025) இன்று திண்டுக்கல்  விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி செல்வம் முருகன் என்பவருக்கு   11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.*

*💥🚨 மேலும் இந்தாண்டு இதுவரை 42 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.*

Ramar – Thiruchirapalli

By TN NEWS