கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாஜக கட்சித் துண்டு அணிவித்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்
Tamilnadu Today