குடியாத்தம் சீவூர் – 11 லட்சத்தில் கட்டிய பயணியர் நிழற்கூடம் மீண்டும் சிதில்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் ₹11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் அவர்கள் இதை திறந்து வைத்தார்.
ஆனால், திறப்பு விழாவிலிருந்து இரண்டு நாட்களுக்குள், மேற்கூரை சீலிங் உடைந்து விழுந்தது. அதே நாளில் அவசரமாக பழுது பார்த்து சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் மேற்கூரை சிதிலமடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சம் மற்றும் பீதியுண்டாகியுள்ளது.
– குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் சீவூர் – 11 லட்சத்தில் கட்டிய பயணியர் நிழற்கூடம் மீண்டும் சிதில்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் ₹11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் அவர்கள் இதை திறந்து வைத்தார்.
ஆனால், திறப்பு விழாவிலிருந்து இரண்டு நாட்களுக்குள், மேற்கூரை சீலிங் உடைந்து விழுந்தது. அதே நாளில் அவசரமாக பழுது பார்த்து சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் மேற்கூரை சிதிலமடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சம் மற்றும் பீதியுண்டாகியுள்ளது.
– குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்