சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் தான் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் அந்த பகுதிலேயே லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் பகுதியை சேர்ந்த 32 வயதான சரஸ்வதி என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். சரஸ்வதி மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் இப்பொது 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களை கவனித்துக்கொண்டு சரஸ்வதி வீட்டில் தையல் வேலை செய்து வந்துள்ளார்.
சரஸ்வதிக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. அதே நேரம் பல ஆண்களுடன் அவர் நெருங்கி பழகியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் கணவர் கணேசனுக்கு தெரியவர, சரஸ்வதியை பலமுறை கண்டித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் சரஸ்வதிக்கு சென்னை, அண்ணா நகரில் உள்ள சலவை கடையில் வேலை செய்து வந்த 37 வயது மதிக்கத்தக்க அன்சாரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.
அந்த இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருப்பதை அறிந்த கணேசன், இந்த தகாத உறவை கைவிடுமாறு கெஞ்சியும், மிரட்டியும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி, தனது கணவர் மற்றும் இரு மகன்களை பிரிந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு அன்சாரியுடன் சென்று, கொளத்தூரில் தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்சாரி மற்றும் சரஸ்வதி வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது சரஸ்வதிக்கும் அன்சாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அன்சாரி, சரஸ்வதியிடம் “இன்னும் எத்தனை பேர் கூட நீ தான் இப்படி பேசிட்டு இருக்க” எனக் கேட்டு சரஸ்வதியை சரமாரியாக அடித்துள்ளார்.
ஏற்கனவே மது போதையில் இருந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார். சரஸ்வதி உயிரிழந்ததை அறிந்து அதிர்ந்த அன்சாரி, உடனே அவர் உடலை வீட்டிற்குள்லேயே வைத்து பூட்டி விட்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அண்ணா நகர் பகுதியில் தலைமறைவாக சில நாள் வாழ்ந்து வந்துள்ளார்.
ஜூலை 21 தேதி சரஸ்வதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அதை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசில் புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியின் கணவர் மற்றும் வீட்டின் அருகே உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பிறகு அன்சாரியை பற்றி தகவல் கிடைக்கவே, அப்பகுதியில் இருந்த CCTV காட்சிகளை கொண்டு அன்சாரியை தேடிவந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பூட்டிய வீட்டில் பெண் சடலமாக மீட்கப்பட்ட விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் – செய்தியாளர்.