ஜூலை 28
குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில்அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ நாகாலம்மன் திருக்கோவிலில் ஆடி மாத நாக சதுர்த்தி முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது .
வ உ சி தெரு புங்கனூர் அம்மன் ஆலயத்தில் இருந்து மேல தாளத்துடன் பால்குடம் ஊர்வலம் முக்கிய விதிகள் வழியாக வந்து நாகாலம்மன் ஆலயத்தில் நிறைவடைந்தது.
நாகாலம்மன்க்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன் பாஸ்கர் மோகன் பாலாஜி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குடியாத்தம் – செய்தியாளர்
