**குமரி ஆனந்தன் (Kumari Ananthan)**
குமரி ஆனந்தன் (1909–1993) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிப் போராளியும் ஆவார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இலக்கியம் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களில் ஆரம்பகாலத்தில் ஈடுபாடு காட்டினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
1952 முதல் 1962 வரை திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி. ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்வி, விவசாயம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காகப் பாடுபட்டார். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சமத்துவக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற தலைப்புகளில் இலக்கியப் படைப்புகளை வெளியிட்டார்.
தனது எளிய வாழ்க்கை முறை, நேர்மை மற்றும் தன்னம்பிக்கைக்காக நினைவு கூறப்படும் குமரி ஆனந்தன், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (வயது 93). தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையான இவர் வயது மூப்பு மற்றும் உடல்
நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று (09/04/2025) அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக . பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் … இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்… இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும்… அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்… உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்..என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….’ என பதிவிட்டுள்ளார்.
தொகுப்பு மு.ஷேக் முஹைதீன்.
