கோவிலில் தரிசனம் செய்து ஊர்வலமாக பிரசாரம் – மாம்பழ சின்னத்திற்கு ஆதரவு கோரிக்கை…!
செஞ்சி | ஏப்ரல் 17
சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் அவர்களுக்கு ஆதரவாக, கூட்டணியில் உள்ள வழக்கறிஞர்கள் அணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தலைமை மற்றும் முன்னிலை:
இந்த நிகழ்ச்சிக்கு:
செஞ்சி நகர அதிமுக செயலாளர் சுந்தர்ராஜன்,
பாமக நகர செயலாளர் சின்னத்தம்பி, ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண் தத்தன்,செஞ்சி தொகுதி வழக்கறிஞர் அணி செயலாளர் வேலவன்,பாமக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலியமூர்த்தி, சக்திராஜன், திருமலை, கோடம்பாடி சுப்பிரமணி, ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கோவில் தரிசனம் – ஊர்வல பிரசாரம்:
செஞ்சி சிங்கவரம் சாலையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், காந்தி பஜார்,திண்டிவனம் சாலை,விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை, பேருந்து நிலையம் பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
பெருமளவில் நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில்:
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வி.ஆர். பிரித்விராஜ் (வரவேற்பு), மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் கு. கண்ணன், வி. ரங்கநாதன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், பாலகிருஷ்ணன், பாமக மாநில இளைஞர் சங்க துணை தலைவர் அருண்மொழிதேவன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் செஞ்சி அய்யனார், பாமக ஒன்றிய செயலாளர்கள் ஆப்செட் முருகன் உள்ளிட்டோர். மேலும் பாஜக நிர்வாகிகள் வி.பி.என். கோபிநாத், தாராசிங் (சிவக்குமார்), தங்கராமு, அன்பழகன் மற்றும் வழக்கறிஞர்கள் ஏழுமலை, மும்மூர்த்தி, அசோக் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் சூழல் தீவிரம்:
செஞ்சி தொகுதியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து களப்பணியில் இறங்கியிருப்பது தேர்தல் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கே. மாரி
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்
