Sat. Jan 10th, 2026

ஆலப்புழா | கேரளா மாநிலத்தின் மனிதநேயச் செய்தி:

“நான் உயிருடன் இருக்கும் வரை இந்தக் குழந்தைகளை கைவிடமாட்டேன்”

இந்த ஒரு வாக்குறுதியைச் சொன்னவர் மட்டும் அல்ல,
அதை மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் காப்பாற்றியவர் கிருஷ்ண தேஜா IAS.

2022 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது,
கோவிட்-19 தொற்றுநோயால் பெற்றோர்களை இழந்த 292 குழந்தைகள் எதிர்கொண்ட அவல நிலை,
அவரை ஆழமாக பாதித்தது.

அந்தக் குழந்தைகளின் கண்ணீருக்கு தற்கால உதவி அல்ல,
நீடித்த பாதுகாப்பும் எதிர்காலமும் தேவை என்பதை உணர்ந்த அவர்,
ஒரு உறுதியான வாக்குறுதியை அளித்தார்:

“இந்தக் குழந்தைகள் வாழ்வில் காலம் சரியாகும் வரை,
நான் அவர்களை கைவிடமாட்டேன்.”

இடமாற்றமும் நின்றுபோகாத மனிதநேயம்:

பொதுவாக அதிகாரிகள் இடமாற்றம் பெறும்போது,
அவர்களுடன் தொடங்கிய திட்டங்களும் பாதியிலேயே நின்றுவிடுவது வழக்கம்.
ஆனால்,
ஆலப்புழா → திருச்சூர் → ஆந்திரா என அவர் இடமாற்றம் பெற்ற போதும்,
அந்த 292 குழந்தைகள்
ஒருபோதும் அவரது நினைவில் இருந்து விலகவில்லை.

“We Are For Alleppey” – அரசு எல்லையைத் தாண்டிய முயற்சி

அரசுப் பதவியின் வரம்புகளைத் தாண்டி,
“We Are For Alleppey” என்ற சமூக ஆதரவு முயற்சியின் மூலம்,
நல்ல உள்ளங்களை ஒன்றிணைத்தார்.

தனியார் நன்கொடையாளர்கள்
சமூக சேவை அமைப்புகள்
தன்னார்வலர்கள் என  இணைத்து,
தொடர்ச்சியான 3 ஆண்டுப் போராட்டம்.

2025 – வாக்குறுதி நிறைவேறிய ஆண்டு

2025 ஆம் ஆண்டில்,
அவர் அளித்த வாக்குறுதி முழுமையாக நிறைவேறியது.

இன்று ஆலப்புழாவின் அந்த 292 குழந்தைகளுக்கும்:

✅ பாதுகாப்பான வீடு

✅ கல்விக்கான முழு வசதிகள்

✅ அடிப்படை வாழ்வாதார பாதுகாப்பு

உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதி கட்டமாக,
வீடுகளின் சாவி வழங்கும் நிகழ்வும் நிறைவடைந்துள்ளது.

அதிகாரம் – சேவைக்கான கருவி

இந்த முயற்சி,
“அதிகாரம் என்பது பதவி அல்ல,
பொறுப்பு” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

மக்களை ஆள அல்ல,
மக்களை பாதுகாக்கவே அதிகாரம் என்ற கருத்தின்
உயிர்ப்பான எடுத்துக்காட்டாக,
கிருஷ்ண தேஜா IAS திகழ்கிறார்.

🙏 மனிதநேயத்திற்கு ஒரு பெரிய சல்யூட்!
🙏 கலெக்டர் சார் – உங்களுக்கு தலை வணக்கம்!

தொகுப்பு:
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS