Fri. Dec 19th, 2025


தருமபுரி மேற்கு மாவட்டம் – மணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துத் தொடங்கிய நிகழ்வு.

நவம்பர் 27 – மணியம்பாடி, தருமபுரி

தருமபுரி மேற்கு மாவட்டம் மணியம்பாடி கிராமத்தில், கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு நிகழ்வுகள்:

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P. பழனியப்பன் அவர்கள்,
புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கழக நிர்வாகிகள் இணைந்து அன்னதானம் வழங்கினர்.

கலந்துகொண்டவர்கள்:

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பெரிய திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வே. பசுபதி, மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி (P.R.O.)

By TN NEWS