இயக்க மறுசீரமைப்பு, மாவட்டத் தலைவர்கள் தேர்வு, ஆலோசனை கூட்டம்.
நவம்பர் 26, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு மது யாக்ஷி கௌடு அவர்கள் குடியாத்தம் வருகை தந்து செய்தியாளர்களை சந்தித்து, “இயக்க மறுசீரமைப்பு பணிக்குழு” மூலம் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறை பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர்,இமயா கக்கன்,வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கிருஷ்ணவேணி. ஜலந்தர், வட்டாரத் தலைவர் எம். வீராங்கன்
இளைஞர் காங்கிரஸ் தலைவர் என். எம். டி. விக்ரமன்
மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன்
ஆடிட்டர் கிருபானந்தம், ஊடகப் பிரிவு யுவராஜ்
அனைவரும் இயக்கத்தின் அமைப்பு வளர்ச்சி, உறுப்பினர் வலிமை, மற்றும் வரவிருக்கும் மாவட்டத் தேர்தல் தொடர்பான உள்துறை விவகாரங்களைப் பற்றி ஆலோசனை நடைபெற்றது.
நகரின் அரசியல் சூழலில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்திய இந்த ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
குடியாத்தம் தாலுகா
செய்தியாளர்
K. V. ராஜேந்திரன்
