
தேதி: 01 நவம்பர் 2025 (சனிக்கிழமை)
இடம்: எரசக்கநாயக்கனுர் கிராம சபை மையக் கட்டிடம்
நேரம்: காலை 11.00 மணி
தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனுர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தனி அலுவலர் பா. ஆண்டாள் தலைமையிலானார்.
🔹 கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
தீர்மானம் 1:
2025 ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தீர்மானம் 2:
கடந்த ஆண்டிற்கான கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை கிராம சபையில் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
தீர்மானம் 3:
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஊரகப் பகுதிகளில் கட்டாயமாக உருவாக்கி, பராமரிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல்.
தீர்மானம் 4:
டெங்கு மற்றும் கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுக்க துப்புரவு, நீர் தொட்டி பராமரிப்பு, குளோரின் கலந்த நீர் விநியோகம் ஆகிய நடவடிக்கைகளை உறுதி செய்தல்.
தீர்மானம் 5:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் — தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கல் தடுப்பு, வாய்க்கால் சுத்தம், புயல் பாதுகாப்பு மையங்கள் தயாராக வைத்தல்.
தீர்மானம் 6:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வட்டார கூட்டமைப்புகளின் பதிவுகளை புதுப்பித்தல்.
தீர்மானம் 7–9:
மனநலம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM), பாலின சமநிலை ஆகிய துறைகளில் மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்குதல்.
தீர்மானம் 10:
SHG உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, பேருந்து சலுகை, காப்பீடு, ஆவின் சலுகை, வங்கி கடன் முன்னுரிமை உள்ளிட்ட பல நன்மைகள் வழங்குதல்.
தீர்மானம் 11:
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் மூலம் 18–35 வயதுடைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்குதல்.
தீர்மானம் 12:
RSETI ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் வழியாக அலுமினியம் வேலை, தச்சு, செல்போன் பழுது, வெல்டிங், வயரிங் போன்ற பயிற்சிகள் வழங்கி, வங்கி கடன் வசதி ஏற்படுத்துதல்.
தீர்மானம் 13–16:
கூட்டமைப்புகள் பதிவுகளை புதுப்பித்தல், மனநலம் மற்றும் பாலின விழிப்புணர்வு, மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.
தீர்மானம் 17:
குழந்தை தத்தெடுத்தல் அரசு விதிமுறைகளின்படி நடப்பதற்கான கண்காணிப்பு,
பள்ளி இடைநிறுத்தம் மாணவர்களை மீண்டும் சேர்த்தல்,
18 வயதிற்கு குறைவானவர்களுக்கு புகையிலை மற்றும் போதைப்பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
📸 செய்தி & புகைப்படம்:
அன்பு பிரகாஷ் முருகேசன்
புகைப்பட கலைஞர் – தேனி மாவட்டம்
