Thu. Nov 20th, 2025

வேலுர்மாவட்டம் குடியாத்தம் அம்மணாங்குப்பம் அறிவுத் திருக்கோயிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் 22 வது ஆண்டு விழா  இன்று நிகழ்த்தப்பட்டது

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் எஸ்.சேகர்  மகரிஷியை குறித்து சிறப்புரையாற்றினார் . திருவண்ணாமலை மண்டலத்தின் செயலாளரும் குடியாத்தம் அறக்கட்டளையின் தலைவருமான கே.முருகவேல் தலைமை உரை ஆற்றினார்.திருவண்ணாமலை மண்டலத்தின் தலைவரும் உலக சமுதாய சேவா சங்கத்தின் விரிவாக்க இயக்குனர் இராம அருள் ஜோதி துவக்கவுரையாற்றினார். மேனாள் செயலாளர் தனபால் வாழ்த்துரை வழங்கினார்


. குடியாத்தம் அறக்கட்டளையைச் சார்ந்த மூத்த பேராசிரியர்களும் பல நிலை ஆசிரியர்களும் வேதாத்திரிய அன்பர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர் இறுதியில் மணவளக்கலைமண்ற நிர்வாகி வே. சரளா நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

By TN NEWS